நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியாகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
என்டிஏ இணையதளத்தில் (https://neet.nta.nic.in) இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்ப பரிசீலனையும் முடிந்த நிலையில், மேற்கண்ட இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுவரை இல்லாத வகையில் நீட் தேர்வுக்கு 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி