மேல்நிலை துணைத் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும் என, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு (11 மற்றும் 12-ம் வகுப்பு) துணைத் தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளன.
தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று (23-ம் தேதி) பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செய்முறைத் தேர்வு தேதி குறித்த விவரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி