பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2026

பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு: 28,550 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

 

பொறி​யியல் மாணவர் சேர்க்​கை​யில் பொதுப் பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்​வில் 28,550 மாணவர்​களுக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், அண்ணா பல்​கலைக்​கழக துறை​சார் கல்​லூரி​கள், தனி​யார் சுயநிதி கல்​லூரி​கள் என 440-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளன.

இக்​கல்​லூரி​களில் பிஇ, பிடெக் படிப்​பு​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இவை ஒற்​றைச் சாளர முறை​யில் பொதுக் கலந்​தாய்வு மூலம் நிரப்​பப்​படு​கின்​றன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்​பில் அரசு ஒதுக்​கீட்​டில் உள்ள இடங்​களில் சேர 2.45 லட்​சம் மாணவர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு பிறகு அவர்​களில் 2.36 லட்​சம் பேர் தகுதி பெற்​றனர். அவர்​களது தரவரிசைப் பட்​டியல் ஜூலை 1-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள் ​ஒதுக்​கீட்டு பிரி​வில் சிறப்புப் பிரி​வினருக்​கான (மாற்​றுத் திற​னாளி​கள், விளை​யாட்டு வீரர்​கள், முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகள்) இணை​ய ​வழி கலந்​தாய்வு கடந்த 13, 14 ஆகிய தேதி​களி​லும், சிறப்பு பிரி​வினருக்​கான பொதுக் கலந்​தாய்வு 15-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை​யும் நடை​பெற்​றது.

இதன்​மூலம் 950 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, பொதுப் பிரி​வினருக்​கான முதல் சுற்று ஆன்​லைன் கலந்​தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்​கியது.

இதில், 200 முதல் 171 கட்​-ஆஃப் மதிப்​பெண் பெற்ற மாணவர்​கள், அரசுப் பள்ளி மாணவர்​கள், பொதுப்​பிரிவு மற்​றும் அரசுப் பள்ளி 7.5% ஒதுக்​கீட்​டில் தகு​தி​யுள்ள தொழிற்​கல்வி மாணவர்​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல் சுற்று கலந்​தாய்​வில் தற்​காலிக​மாக 32,514 பேருக்கு கடந்த 24-ம் தேதி தற்​காலிக ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டு, அதை உறு​தி​செய்ய 25-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்​கப்​பட்​டது. 28,550 பேர் தற்​காலிக ஒதுக்​கீட்டை உறு​தி​செய்​தனர்.

இந்​நிலை​யில், 28,550 பேருக்​கும் நேற்று காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​ட​தாக தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்​தமன் தெரி​வித்​தார்.

இறுதி ஒதுக்​கீட்டு ஆணை பெற்ற மாணவர்​கள் ஜூலை 30-ம் தேதிக்​குள் தங்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட கல்​லூரிக்​குச் சென்று சேர்க்​கைப் பணி​களை முடிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பொறி​யியல் 2-வது சுற்று கலந்​தாய்வு ஆக.3-ம் தேதி தொடங்​கு​கிறது. கட்​-ஆஃப் மதிப்​பெண் 171 முதல் 135.75 வரை உள்​ளவர்​கள்​ அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி