பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2026

பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம்

 

பு​திய பாடத்​திட்​டத்​தின்​படி பேசுதல், கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் 70 சதவீத பங்​கேற்பை உறு​தி​செய்ய வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை​யில் மாநில கல்விக் கொள்​கை​யின்​படி புதிய பாடத்​திட்​டம் தற்​போது உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஏற்​கெனவே 1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு புதிய பாடத்​திட்​டங்​களின்​படி பாடநூல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தொடர்ந்து 4 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு 2027-28-ம் கல்​வி​யாண்​டிலும், 9 முதல் 12-ம் வகுப்​பு​களுக்கு 2028-29-ம் கல்​வி​யாண்​டிலும் புதிய பாடநூல்​கள் வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் புதிய பாடத்​திட்​டத்​தின்​படி வகுப்​பறை செயல்​பாடு​கள், ஆசிரியர்​கள் கையாளும் முறை, கல்வி அலு​வலர்​கள் ஆய்​வின்​போது கண்​காணிக்க வேண்​டிய அம்​சங்​கள் தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி பாடநூல்​களில் உள்ள செயல்​பாடு, பயிற்​சி,விளை​யாட்​டு, செயல்​திட்​டம் ஆகிய​வற்​றில் கற்​றல் விளைவு​களை அறிந்து ஆசிரியர்​கள் வகுப்​பறை செயல்​பாடு​களை செயல்​படுத்த வேண்​டும்.

கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் பங்​கேற்பு 70 சதவீதம் இருக்​கவேண்​டும். இதையெல்​லாம் கல்வி அலு​வலர்​கள் கண்​காணிக்க வேண்​டும்.

அதே​போல், புதிய பாடத்​திட்​டத்​தின்​படி திறன்​களை மைய​மாகக் கொண்ட மதிப்​பீட்டு முறை தற்​போது கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. மனப்​பாட முறையை பின்​பற்​றாமல் சிந்​தித்து விடை அளிக்​கும் வகை​யில் வினாக்​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளன.

கற்​றல் பயணம், நானே செய்​வேன், திறனறி மதிப்​பீடு ஆகிய 3 வகை​யான மதிப்​பீடு​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஆசிரியர்​கள் தங்​கள் அனுபவங்​களை கையேட்​டில் அவசி​யம் பகிர வேண்​டும் என்பன உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி