பொறியியல் டிப்ளமா தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை இதுவரை பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் செப்.3 வரை பெற்றுக்கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கக உதவி இயக்குநர் (தேர்வுகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டிப்ளமா தேர்வுகளை (ஆர்.2023 திட்டம்) எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை ஆக.3 முதல் 7-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் அறிவுறுத்தப்பட்டன. ஆனாலும், பல கல்லூரிகள் இதுவரை இவற்றைப் பெறவில்லை.
மாணவர்களின் டிப்ளமா சான்றிதழ்களும் தற்போது தயார் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு விரைவாக வழங்கும் பொருட்டு கல்லூரியின் பிரதிநிதியை உரிய அனுமதி கடிதத்துடன் அனுப்பி, ஆக.31 (இன்று) முதல் செப்.3 வரை தற்காலிக சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் மற்றும் டிப்ளமா சான்றிதழ்களை தொழில்நுட்பக் கல்வி இயக்கக கணினி பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி