பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள்
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை பழங்குடியினர் நலத் துறை வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு 357 மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் படிக்கச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறியதாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்களுக்கு சவாலான ஒன்று.
அதை தாண்டி படிக்க அவர்களுக்கு ஊக்கமளித்து வழிநடத்திச் செல்கிறோம். அதன்படி, வாசுகி பவுண்டேஷனுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து வருகிறோம்.
42 போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து, எங்களது மாணவர்கள் ஐஐடி, எம்ஐடி, நிஃப்ட், என்ஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் 80 பேர், பழங்குடியின மாணவர்கள் 277 பேர் போட்டித் தேர்வில் வென்று படிக்கச் சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி