மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2026

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

 பழங்​குடி​யினர் நலத்​ துறை​யின் கீழ் 36 உண்டு உறை​விட அரசுப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இங்கு பயிலும் மாணவர்​கள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்​வு​களில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்​சிகளை பழங்​குடி​யினர் நலத் ​துறை வழங்கி வரு​கிறது.

அதன்​படி, இந்​த ஆண்டு 357 மாணவர்​கள் பல்​வேறு மாநிலங்​களில் படிக்கச் சென்​றுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்​தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறிய​தாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்​களுக்கு சவாலான ஒன்​று.

அதை தாண்டி படிக்க அவர்​களுக்கு ஊக்​கமளித்து வழிநடத்திச் செல்​கிறோம். அதன்​படி, வாசுகி பவுண்​டேஷனுடன் இணைந்து மாணவர்​களுக்கு பயிற்​சி​அளித்து வரு​கிறோம்.

42 போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளித்து, எங்​களது மாணவர்​கள் ஐஐடி, எம்ஐடி, நிஃப்ட், என்​ஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்​ளனர்.

இந்​த ஆண்டு ஆதி​தி​ரா​விடர் மாணவர்​கள் 80 பேர், பழங்​குடி​யின மாணவர்​கள் 277 பேர் போட்டித் தேர்​வில் வென்று படிக்கச் சென்​றுள்​ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி