செய்முறை தேர்வாளர் பணிக்கு இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்: கல்வியியல் பல்கலை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2026

செய்முறை தேர்வாளர் பணிக்கு இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்: கல்வியியல் பல்கலை எச்சரிக்கை

பி.எட்., செய்முறை தேர்வுக்கான தேர்வாளர் பணிக்கு, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், தமிழகம் முழுதும், 500க்கும் அதிகமான கல்வியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும், பி.எட்., படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் செமஸ்டர் முழுதும் செயல் முறை பாடத்திட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில், 16 வாரம் பள்ளியில் நேரடி பயிற்சி வழங்கப்படும். அதன்பின், செயல்முறை தேர்வு நடத்தப்படும். இந்த செயல்முறை தேர்வை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் என, இரண்டு பேர் கொண்ட தேர்வாளர்கள் குழு கண்காணிக்கும். இந்த இரண்டு உறுப்பினர்களையும், பல்கலையே நேரடியாக நியமிக்கிறது.அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்களே, செய்முறை தேர்வை கண்காணிக்கும் தேர்வாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டுகளில், செய்முறை தேர்வுக்கான தேர்வாளர் தேர்வில், இடைத்தரகர்கள் வாயிலாக வசூல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பல்கலை எடுத்துள்ளது.'செய்முறை தேர்வுக்கான தேர்வாளர்கள் நியமனம், பல்கலை விதிகளுக்கு உட்பட்டு, வெளிப்படை தன்மையுடன் நடக்கும்' என, கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்மணி தெரிவித்துள்ளார்.தேர்வாளர் நியமனத்திற்கு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், பல்கலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி