திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:489
குறள்:
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
பொருள்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.
No smoke with out fire
நெருப்பில்லாமல் புகையாது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன்.
2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.
பொன்மொழி :
“இளமையில் கற்ற திறமை, வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.”
Thought for the Day :
“A skilled generation is the foundation of a strong nation.”
பொது அறிவு :
1. 50 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
ஹம்பி (கர்நாடகா)
2. 20 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது?
எல்லோரா குகை (மகாராஷ்டிரம்)
English words :
1. Audacious – Bold and brave, துணிச்சலானவர்.
2. Astounding – Very surprising, மிகவும் ஆச்சரியமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – தொட்டபெட்டா
உயரம்: சுமார் 2,637 மீட்டர்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டி நகருக்கு அருகில் அமைந்துள்ளது.“தொட்டபெட்டா” என்ற பெயர் பொதுவாக “பெரிய மலை” என்ற பொருளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
NMMS :
MAT
ஹைட்ரோஃபோபியா என்பது :
(1) நீரைக் கண்டு பயப்படுவது
(2) ஒலியைக் கண்டு பயப்படுவது
(3) பசியின்மை
(4) தோல் தடிப்பு
விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது
செப்டம்பர் 08
நீதிக்கதை
“ஆசிரியரின் அறிவுரை ”
ஒரு பள்ளியில் நிவேதா என்ற மாணவி படித்து வந்தாள். ஒருநாள் ஆசிரியர் வகுப்பில் அனைவருக்கும் ஒரு சிறிய பணியை வழங்கினார். நிவேதா அதைச் சரியாகச் செய்யவில்லை .
ஆசிரியர் அன்பாக, “நிவேதா, இன்னும் கொஞ்சம் கவனமாகச் செய்தால் நன்றாக இருக்கும்,” என்று அறிவுரை கூறினார்.
அதைக் கேட்ட நிவேதா கோபமடைந்து, ஆசிரியரிடம் எதிர்த்து பேசினாள். வகுப்பு முடிந்ததும் அவளுடை ய தோழி அவளிடம், “ஆசிரியர் உன்னைத் தாழ்த்துவதற்காக சொல்லவில்லை, உன் தவறைச் சுட்டிக்காட்டி முன்னேற உதவுவதற்காகத்தான் சொன்னார்,” என்றாள்.
நிவேதா தனது தவறை உணர்ந்தாள். மறுநாள் ஆசிரியரிடம் சென்று, “ஆசிரியரே , நேற்று நான் கோபத்தில் உங்களிடம் எதிர்த்துப் பேசியது தவறு. என்னை மன்னியுங்கள். இனிமேல் உங்கள் அறிவுரையை மதிப்பேன்,” என்றாள்.
ஆசிரியர் மகிழ்ச்சியுடன் நிவேதாவைப் பாராட்டினார்.
🌱 நீதி:
ஆசிரியர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். அவர்களின் அறிவுரையைப் பொறுமையாக கேட்டு, தவறு இருந்தால் பணிவுடன் திருத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி