அரசு உதவி பெறும் பள்ளிகளில் PG ஆசிரியர் நியமனம் இழுபறி ஒப்புதல் கிடைக்காமல் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2026

அரசு உதவி பெறும் பள்ளிகளில் PG ஆசிரியர் நியமனம் இழுபறி ஒப்புதல் கிடைக்காமல் தவிப்பு


 தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் (பி.ஜி.,) நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

 இவர்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முறையாக நியமிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுகணக்கில் இழுத்தடிக்கின்றனர்.

அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும் ஏதோ ஒரு விளக்கம் கேட்டு பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பும் பணிகளைத் தான் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். இதனால் நியமன ஒப்புதல் கிடைக்காத பலர் சம்பளம் பெறமுடியாமல் தவித்து, தற்காலிகமாக குறைந்த சம்பளம் பெற்று பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர் சார்பில் அதிகாரிகளை பலமுறை அணுகியும் தீர்வு கிடைத்தபாடில்லை. இதன் பின்னர் பணியில் ஒரு ஒப்புதலுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அலுவலகங்களில் 'பேரம்' நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள துறை செயலர் இன்னசென்ட் திவ்யா, இதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பு குறித்து விளக்கமும் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான நியமனங்களுக்கு உடன் ஒப்புதலளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Office Management and Secretaryship & Typography and Computer Applications Group தட்டச்சு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடவில்லை. மேலும் அரசாங்க பள்ளிகளில் அந்த Group மூடப்படுகிறது. மற்றும் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை ஏற்கனவே இருந்த தொழிற்கல்வி பயிற்றுநர்(Craft Instructor Agriculture, Weaving, Book Binding, Typewriting. மற்றும் நூலகர் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி