1,000 பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

1,000 பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் தவிப்பு.

"பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, குறைந்தபட்ச நிலப்பரப்பு தேவைக்கான நிபந்தனைகளை, நிரந்தரமாக தளர்த்தி, விண்ணப்பித்து காத்துள்ள, அனைத்து வகை பள்ளிகளுக்கும், அங்கீகாரம்
வழங்க வேண்டும்"என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள், முதல்வர் தனிப்பிரிவில், நேற்று மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: அரசு உத்தரவுப்படி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, மாநகராட்சி பகுதியில், ஆறு கிரவுண்ட்; மாவட்டத் தலை நகரில், எட்டு கிரவுண்ட்; நகராட்சியில், 10 கிரவுண்ட்; பேரூராட்சியில், ஒரு ஏக்கர்: ஊராட்சியில், மூன்று ஏக்கர் இருக்க வேண்டும். இந்தஅரசாணை, அரசு பள்ளிகளுக்கும், தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.இவ்வாணை, தற்போது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், 1,000 தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இச்சட்டத்தை உண்மையாக அமல்படுத்தினால், அதிகம் பாதிக்கப்படுவது, அரசு பள்ளிகளாகத் தான் இருக்கும்.எனவே, நிலப்பரப்பு தொடர்பான அரசாணை, பழைய பள்ளிகளுக்கு பொருந்தாது. இனி துவங்கப் போகும் பள்ளிகளுக்கு பொருந்தும்என, உத்தரவிட வேண்டும். அல்லது நிலத்தின் விலை உயர்வால், இன்றைய சூழலில் வேறு இடம் கிடைக்காது என்பதாலும், பள்ளியை சுற்றி, ஆயிரக்கணக்கான வீடுகள் வந்து விட்டதால், அவற்றை மீறி, பள்ளியிடம் ஒரே இடத்தில் வாங்க முடியாது என்பதால், நிலத்தின் அளவை குறைத்தோ அல்லது அரசாணையை நீக்கியோ உத்தரவிட வேண்டும்.இப்பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட, வல்லுனர் குழு அறிக்கையை ஏற்று, உடனே அந்த அறிக்கையை வெளியிட்டு, எந்தப் பள்ளிக்கும் பிரச்னை இல்லாமல், அனைத்து பழைய பள்ளிகளையும்,நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண்: 48, 49ல் கூறப்பட்டுள்ள, குறைந்தபட்ச நிலப்பரப்பு தேவைக்கான நிபந்தனைகள், நிரந்தரமாக தளர்த்தி, விண்ணப்பித்து காத்துள்ள, அனைத்து வகை பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி