மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்,... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்,...

கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியில் 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் சோர்வு மற்றும் பசியை போக்கும் வகையில் மாலை நேர சிற்றுண்டி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 2550 மாணவர்களுக்கும், பிளஸ் 2 படிக்கும் 2450 மாணவர்களுக்கும், மாலை நேர சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழங்கப்படும் சிற்றுண்டிகள்:
சுக்கு டீ 100 மில்லி, வல்லாரை சூப் 150 மில்லி, தூதுவளை சூப் 150 மில்லி (ஏதாவது ஒன்று) வழங்கப்படும். சோயா சுண்டல் 100 கிராம், கருப்பு கொண்டை கடலை சுண்டல் 100 கிராம், பாசிப்பயறு சுண்டல் 85 கிராம் (ஏதாவது ஒன்று), ராகி புட்டு 100 கிராம், மக்காச்சோளப்புட்டு 100 கிராம், அரிசி புட்டு 100 கிராம் (ஏதாவது ஒன்று) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சிற்றுண்டி பொருட்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து வினியோகம் செய்யப்படும். சிற்றுண்டிக்காக ஒரு மாணவனுக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய் செலவிடப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி