ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்துஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2013

ஆசிரியர்களுக்கு தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: அனைத்துஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.


ஆசிரியர்களுக்கு வருமானவரி மற்றும் தொழில்வரி ஆகிவற்றிலிருந்து முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார். மு.ஆ.தமிழ்க்குமரன் வரவேற்றார். பழனிவேல்ராஜன், சுபாஷ், அ.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்தன், பொறியாளர் அ.கலியபெருமாள், ஜெ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ரா.ஜெயசீலன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், வருவாய்த்துறையிலிருந்து, ஆதிதிராவிட நலத்துறையை தனியாக பிரித்து தனி இயக்குநரகமாக அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை உடன் களைய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி