கற்பித்தல் பணிக்கு மட்டுமே ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

கற்பித்தல் பணிக்கு மட்டுமே ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும்.


ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சங்கத்தின் சேலம் மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கொளத்தூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜி.இளங்கோ, பொருளாளர் எம்.மாயகிருஷ்ணன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.மாநிலப் பொதுச் செயலர் டி.கோவிந்தன் சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு தனியாக அமைச்சுப் பணியாளர்களை நியமித்துக் கொண்டு, ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதினான்கு வகையான நலத் திட்டங்களை பள்ளிகளுக்கு வழங்கி ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தலைமை ஆசியர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை உள்ள அணைத்து காலிப் பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி