மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு.


மழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு, இயக்குனர், நேற்று வெளியிட்ட உத்தரவு:
* மழை காலம் துவங்குவதால், பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பில், தலைமை ஆசிரியர், தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
* வளாகத்தில், கிணறு, கழிவுநீர் தொட்டி, நீர்தேக்க தொட்டி ஆகியவை திறந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, திறந்திருந்தால், உடனடியாக மூட வேண்டும்.
* 'இடி, மின்னலின் போது, மாணவர்கள், மரத்தின் கீழ் நிற்கக்கூடாது' என, வகுப்பில் அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்களைக் கொண்டு, மின்சாதனங்களை இயக்குவதை, தவிர்க்க வேண்டும்.
* சாலை விதிகள் குறித்தும், சாலைகளில், மழை நீர் தேங்கி இருந்தால், எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களுக்கு, விளக்க வேண்டும்.
* பள்ளிகளில், முதலுதவி மருத்துவ பெட்டிகள், தயாராக வைத்திருக்க வேண்டும்.
* தீயணைப்பு சாதனங்களையும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி