பெங்களூரு: பி.யூ.சி., மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': 23 மதிப்பெண் வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

பெங்களூரு: பி.யூ.சி., மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': 23 மதிப்பெண் வழங்க உத்தரவு

இரண்டாமாண்டு பி.யூ.சி., தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, பி.யூ.சி., போர்டு, 23 சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இரண்டாமாண்டு பி.யூ.சி., தேர்வில் ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல் தேர்வு வினாத்தாள்கள் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் சுட்டி காண்பித்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வேறு வழியின்றி, தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் கொடுப்பதாக கூறி, பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இதையடுத்து, இயற்பியலுக்கு 1, வேதியியல், 8, ஆங்கிலம், 5, கணக்கு, 9 என, சலுகை அடிப்படையில் மதிப்பெண் வழங்க பி.யூ.சி., கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், கணக்கில் 26, வேதியியல், 27, ஆங்கிலம், 30, இயற்பியல், 34 மதிப்பெண் வாங்கினால் போதும். முக்கிய பாடங்களில், வினாத்தாள்களை தவறாக அச்சடித்த பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க, பி.யூ.சி., போர்டு தீர்மானித்துள்ளது. மே முதல் வாரம், தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி