தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்வை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித் தேர்வர்கள் அனைவரும் ww.tndge.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 22-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி