தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்'கலக்கத்தில் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்'கலக்கத்தில் மாணவர்கள்


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இல்லை. தமிழகத்தில் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால் இப்பிரிவு மாணவர்களுக்குமுக்கிய கலை, அறிவியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை தேதி மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட சில நகரங்களில் சி.பி.எஸ்.இ., முடிவு வெளியாவதற்குள் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி