ஜெ. வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2015

ஜெ. வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தமிழக - கர் நாடக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறை யீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக் கில் 11-ம் தேதி காலை 11 மணியள வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இதையடுத்து அதிமுகவினர் அதிக அளவில் பெங்களூரு செல்ல வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி இன்று (10-ம் தேதி) மாலை முதல் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி, ஜூஜூவாடி மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் வழியாக பெங்களூர் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் இரு மாநில போலீஸாரும்பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது மாநில எல்லை யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுபோல் தற்போதும் பாதுகாப்பு பலப்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் இருந்துபெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோத னைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளதாக இரு மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் கூறும்போது, மாநில எல்லையில் ஓசூர் உட்கோட்ட போலீஸார் 300-க் கும் அதிகமானோர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும், எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில போலீஸாரிடம் இன்று ஆலோசிக்க உள்ளோம் என்றார்.

3 comments:

  1. இன்று அன்னையர் தினம். நாளை நீதியின் தினம்.

    ReplyDelete
  2. நாளை அம்மாவுக்கு சிறை தண்டனை உறுதி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி