தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 83 அரசு கல்லூரிகள், 165 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350க்கும் மேற்பட்ட சுய நிதி கல்லூரிகள் உள்ளன. காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி மட்டுமின்றி, பெரும்பான்மை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்வு இன்றுடன் முடிகிறது. கோடை விடுமுறைக்கு பின்பு,அனைத்து கல்லூரிகளையும்,ஜூன் 18ம் தேதி ஒரே நாளில் திறக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக அரசு கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை இந்த மாத கடைசிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கல்லூரிகளில், கடந்த 4ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் மே 25ல் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்கள் அவர்களுடைய மதிப்பெண் பட்டியல் நகலில், தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் தனியார் கல்லூரிகள், முன்கூட்டி மாணவர் சேர்க்கையில் ஈடுபடும். அரசு கல்லூரிகளை பொறுத்தவரை, கல்லூரி தொடங்கிய பிறகே மாணவர் சேர்க்கையை நடக்கும். தற்போது இம்மாத கடைசிக்குள் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் சுயநிதி கல்லூரிகள் தற்போதே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளன. ஒரே நாளில் கல்லூரி தொடங்க உள்ளதால் இறுதி வேலை நாளை மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் கல்லூரிகளே கணக்கிட்டு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி