பி.இ. சுரங்கவியல் துறையில் முதல் முறையாக மாணவிகளைச் சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:-
பி.இ. சுரங்கவியல் படிப்பு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் 30 இடங்கள் உள்ளன. இதில் இதுவரை மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். ஏனெனில், சுரங்கச் சட்டம் 1952-இன் படி, சுரங்கத்துக்குள் பெண்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு மேற்பகுதியில் நடைபெறும் சுரங்கம் தொடர்பான பணிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே பெண்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சுரங்க நடைமுறைகள் 1957 பிரிவு 86(2)-இன் படி, குகைபோன்ற அமைப்பில் நடைபெறும் சுரங்கப் பணியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் ஊழியர்களின் துணை இல்லாமல் பெண் ஊழியரை பணியமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் காரணமாக, பி.இ. சுரங்கவியல் படிப்பில் இதுவரை மாணவிகள் சேர்க்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்பிலும் மாணவிகளைச் சேர்க்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கலந்தாய்வு அறிவிப்பின் மாணவர் விவரங்களில், இதுதொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.
பி.இ. சுரங்கவியல் படிப்பு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் 30 இடங்கள் உள்ளன. இதில் இதுவரை மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். ஏனெனில், சுரங்கச் சட்டம் 1952-இன் படி, சுரங்கத்துக்குள் பெண்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு மேற்பகுதியில் நடைபெறும் சுரங்கம் தொடர்பான பணிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே பெண்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சுரங்க நடைமுறைகள் 1957 பிரிவு 86(2)-இன் படி, குகைபோன்ற அமைப்பில் நடைபெறும் சுரங்கப் பணியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் ஊழியர்களின் துணை இல்லாமல் பெண் ஊழியரை பணியமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் காரணமாக, பி.இ. சுரங்கவியல் படிப்பில் இதுவரை மாணவிகள் சேர்க்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்பிலும் மாணவிகளைச் சேர்க்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கலந்தாய்வு அறிவிப்பின் மாணவர் விவரங்களில், இதுதொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி