பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

காஞ்சிபுரத்தை சேர்ந்த பி.சதீஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஏப்ரல் 22-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டாலும்,
நேர்காணலில் பெறும்மதிப்பெண்கள் அடிப்படை யிலேயே பணி நியமனம் செய் யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த தேர்வு முறையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 31-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் இவ்வழக்கை விசாரித்து, “ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையில் நிரப்பப்பட மாட்டாது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி