தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2015

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில்சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் இணைத்து வழங்க வேண்டும்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசாணை 266–ஐ திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொன்முடி, திருஞானகணேசன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் மணி வாசகம், பிரபாகரன், வின்சென்ட், கிருஷ்ணன், பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் இளங்கோவன், இடைநிலை ஆசிரியர் சங்க முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.உண்ணாவிரதத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:–ஆசிரியர்கள் எந்த நோக்கத்திற்காக என்னை அழைத்து இருக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் புரியும்.

இந்த அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க வில்லை.வருகிற சட்டசபை தேர்தல் மூலம் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய் மொழியாக தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்தப்படும்.தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பணியில் சமூக விரோதிகள் தலையீடு அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை களைய வேண்டும்.அரசு பள்ளியில் 30 வருடம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு அளித்து சிறப்பு நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். அதுபோல அரசுஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அந்த குறை களையப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் இ.சி.சேகர், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. திமுக ஆட்சிக்கு வந்தால். .....???????!!!!!!!!!

      Delete
  2. All political party before the election said like that after the election?????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி