மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில் சிக்ரி துணை இயக்குனர் மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழுவாக வருகை தந்து செயல் முறை விளக்கம் கொடுத்ததுடன் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடியதும் இதுதான் முதல் முறை


நாட்டிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பான் கருவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிமுகபடுத்தி விஞ்ஞானி பேச்சு

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் விஞ்ஞான வளர்ச்சிப் பற்றி விழிப்புணர்வுபயிற்சி முகாம் சிக்ரி நிறுவன துணை இயக்குநர் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.தேவகோட்டை சேவுகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.தலைமையாசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். சிக்ரி நிறுவன கண்டுபிடிப்பு பயன் பற்றி துணை இயக்குநர் ஜெயசந்திரன் பேசுகையில், "" அன்றாட வாழ்க்கை பயன்பெறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறோம். 450 பொருட்கள் கண்டுபிடித்துள்ளோம். பாம்பன் பாலம், அதில் உள்ள ராடுகள் துருப்பிடிக்காமல் இருக்க பெயின்ட் கண்டுபிடித்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது துருப்பிடிக்காத ரயில் தண்டவாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு திண்டுக்கல்லில் 5 கிமீ தூரம் பரிசார்த்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பேட்டரிகளின் பல்வேறு நிலைகளிலும்,எடை குறைவாகவும் தயாரித்துள்ளோம்.

ஹைட்ரஜன் அளவை கண்டுபிடிக்கும் புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். அயோடின் உப்பு,மின்முலாம் பூசுதல்,நிக்கல் குரோமியம்,காப்பர்,தங்க முலாம் பூசுதல் போன்றவை காரைக்குடி சிக்ரி மூலம் தான் முதலில் கண்டுபிடிக்கபட்டது .எவர் சில்வர் நிக்கலில் குரோமியம் சேர்த்து,வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறிய தொழில் நுட்பங்களை எல்லாம் சிக்ரி கண்டுபிடித்து உள்ளது.தகுதிகேற்றாற்போல்,அறிவிற்கு ஏற்றார் போல் மூளையில் ,மனதில் அறிவியல் தொடர்பாக சந்தேகங்கள் ஏற்படலாம்.அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் ஒரு கூட்டு முயற்சியாக செயல்படுவது பள்ளி மாணவர்கள் மத்தியில் உந்துதலை ஏற்படுத்துகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். எதிர் காலத்தில் அறிவியல் துறையில் சிறந்து விளங்க, விஞ்ஞானிகளாக உருவாவதற்காகவே பள்ளி கல்லூரிகளில் விஞ்ஞானம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறோம், என்றார். விஞ்ஞானிகள் பரமசிவம்,முரளீதரன், முருகேசன் பேசினர். மாணவர்கள்ரஞ்சித்,ஜெகதிஸ்வரன் ,வசந்த குமார்,மாணவிகள் சக்தி,பரமேஸ்வரி,ராஜேஸ்வரி,காயத்திரி உட்பட பல மாணவ,மாணவிகள் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.

ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி