ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரக்கோணம் வட்டாரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நீடிக்கும் குளறுபடியைக் கண்டித்து, போராட்டம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆசிரியர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படும். அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரே தேதியில் வழங்கும் நிலை இருந்து வந்தது.


இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு தேதியிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஒரு தேதியிலும்ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 6-ஆம் தேதி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.


மணியக்கார தெருவில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமைஆசிரியை, 8 ஆசிரியைகளுக்கு செவ்வாய்க்கிழமை வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இந்தக் குளறுபடியை பள்ளிக்கல்வித் துறை களைய வேண்டும். இதுபோன்ற குளறுபடிகளை நீக்கி ஒரே தேதியில் தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி