கலந்தாய்வுக்குப் பின் பணியிட மாறுதல்: தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

கலந்தாய்வுக்குப் பின் பணியிட மாறுதல்: தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை

தேனியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் கலந்தாய்வு முடிவடைந்த பின்னர், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வியாழக்கிழமை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.


இது குறித்து, மாவட்டத் தலைவர் வே. பழனிராஜ், செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாகக் கூறியது:


ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. கலந்தாய்வுக்குப் பின்னர், அகமலை தொடக்கப் பள்ளியில் இருந்து சிலைமலை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, தாடிச்சேரிக்கு முறைகேடாக இடம் மாற்றம் செய்து, மாவட்டத் தொடக்கக் கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும், கோவில்பாறை பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு முறையற்ற பதவி உயர்வு அளித்தும், சிங்கராஜபுரம் பள்ளியில் இருந்து கணேசபுரம் பள்ளிக்கு மனம் ஒத்த பணியிட மாறுதலில் சென்றவரை மீண்டும் பணியிட மாற்றம் செய்தும், கெங்குவார்பட்டி பள்ளியில் இருந்து நாகலாபுரம் பள்ளிக்கு ஒருவரை பணியிட மாற்றம் செய்தும், மாவட்டதொடக்கக் கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


எனவே, கலந்தாய்வு முடிவடைந்த பின்பு, முறைகேடாக வழங்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவுகளை ரத்து செய்யவேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்த அதிகாரிகள் முன் வராத நிலையில், ஆசிரியர்களின் முற்றுகைப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி