மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நாளை (24-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்புடையதல்ல. அஞ்சல் துறையின் கடைநிலைஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் ஊதிய உயர்வுவெறும் 14.29 சதவீதம் அளவில்தான் உள்ளது. இது ஏற்க முடியாத ஒன்று.இதனைக் கண்டித்து தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக வட்ட தலைமை அஞ்சலக வளாகத்தில் வரும் 24-ம் தேதி (நாளை) கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், தமிழகத்தின் தலைமை மற்றும் கோட்ட அஞ்சலகங்களின் வாயிலில் வரும் 27-ம் தேதி மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Nov 23, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி