அரையாண்டுத் தேர்வில் வினாத்தாள் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

அரையாண்டுத் தேர்வில் வினாத்தாள் குழப்பம்


ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு இன்று அரையாண்டுத் தேர்வு துவங்க உள்ள நிலையில் வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்று முதல் டிச.23 வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது. வினாத்தாள் வழங்க ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு ரூ.50,ஒன்பதாம் வகுப்புக்கு ரூ.80, மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.100 என கட்டணம் வசூலித்துள்ளனர்.

இந்நிலையில் வினாத்தாள் கிடைக்கப்பெறாத பாடங்களுக்கு அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் உள்ள நிலையில் வினாத்தாளை பள்ளிகளே தயாரிக்க உத்தரவிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி