ஆந்திரா , அசாமில் பள்ளிகளை திறக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

ஆந்திரா , அசாமில் பள்ளிகளை திறக்க முடிவு

 


மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில், நாளை மறுநாள்,(செப்.,21) பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுகள், இதுகுறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளை திறக்க, அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், அசாமில், நாளை மறுநாள், பள்ளிகளை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த, 15 நாட்களுக்கு, ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு வெளியே இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, பாடங்களில் சந்தேகம் இருந்தால், தங்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், இரண்டு அரசு பள்ளிகள், சோதனை முறையில் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.

டில்லியில், அக்டோபர், 5ம் தேதி வரை, பள்ளிகள் இயங்காது என, மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. குஜராத், உத்தர பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துஉள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி