உடற்கல்வியை ஊக்குவிக்க. ரூ.18.94 கோடி நிதி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2021

உடற்கல்வியை ஊக்குவிக்க. ரூ.18.94 கோடி நிதி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

 


அரசு பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் பல்வேறு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மவ்லும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஊக்குவிக்க முதற்கட்டமாக 18.94 கோடி நிதியை பள்ளிகல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம், தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளின் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான உபகரணங்களை வாங்க அறிவுறுத்தியுள்ளது.

4 comments:

  1. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. ஐயா காலி பணியிடங்களை நிரப்புங்கள்.

    ReplyDelete
  4. 10 days only we have...kindly tet appointment needed

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி