அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பி.ஏ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 1 நிலவரப்படி, அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நி்ர்ணயம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த வகையில், நடப்பு கல்விஆண்டில் (2021-2022) அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்பணியிட நி்ர்ணயம் மேற்கொள்ளப் பட்டது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அனுமதி அளித்து ஆணைவழங்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களைநிரப்பத்தக்க காலிப்பணியிடங்களாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இடவசதி கழிப்பிட வசதி சரியாக இருக்குமா
ReplyDeleteTRB la enna than nadakuthu onnum puriyala
ReplyDeleteஇதெல்லாம் நீங்க கேக்க கூடாதுன்னு நாங்க 200கிமீ அப்பாலிக்கா சென்டர் போட்றோம்...
Deleteஅப்பயும் கேப்பிங்க கேள்வி 😡😡😡
வருடாந்திர அட்டவணையில் பட்டதாரி ஆசியர் பணியிடங்கள் குறைவாக காட்டப்பட்டுள்ளது
ReplyDelete2013 TET தேர்ச்சி பெற்ற மக்களுக்கு அரசு கொடுத்த சரியான எதிர்பார்ப்பு மரியாதை
ReplyDelete2013ன்னு பிரிக்காதீங்க....
Deleteநீ அந்த முக்குனா ....
நான் இந்த முக்கு....
பிச்சை பிச்சை தான் ...
முன்னேற வழிய பாருங்க ஜி ...
டெட் + சீனியரிட்டி கேளுங்க....
வேஸ்ட் sir no posting competitive exam only 1098 posting
ReplyDelete2013 தகுதித்தேர்வு வைத்தே நியமனம் செய்யலாம்
ReplyDeleteதிமுக அரசு திடிரென அந்தர் பல்டி அடிப்பது வேதனைக்குரியது
Voted DMK waste government achi Sari illai
ReplyDelete