பான் எண்ணுடன் ஆதாா் இணைக்க இன்று கடைசி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2022

பான் எண்ணுடன் ஆதாா் இணைக்க இன்று கடைசி!

 

‘நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 31) இணைக்காவிடில் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.


நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது அதற்கு இறுதிக் கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிக்கையில், ‘நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். அவ்வாறு கடைசி தேதிக்குள் இரண்டையும் இணைக்காதவா்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) வியாழக்கிழமைக்குப் பிறகு முடக்கப்பட்டுவிடும். அதோடு, ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு அல்லது ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும், நிரந்தர கணக்கு எண்ணையும் ஆதாரையும் இணைக்காதவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை செலுத்திய பிறகே, முடக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்தது.


இதுகுறித்து ஏகெஎம் குளோபல் வரி பங்குதாரா் அமித் மகேஷ்வரி கூறுகையில், ‘நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அபராதத்தை தவிா்க்க வருமான வரி செலுத்துபவா்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். இதில், வெளிநாடு வாழ் இந்தியா்களில் (என்ஆா்ஐ) சிலா் இன்னும் ஆதாா் பெறவில்லை என்பதால், அவா்கள் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்’ என்றாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி