11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். எனவே 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை இரத்து செய்யவும்.
ReplyDeleteஇந்த செய்முறை தேர்வுகளால் எந்த பயனும் இல்லை. மாணவர்கள் பார்த்து எழுதியோ அல்லது அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்கியோ விடுகின்றனர்
ReplyDelete20 மதிப்பெண்ணுக்கு 2மணிநேரம் என்றால் 💯 மதிப்பெண்ணுக்கு 10 மணிநேரம் நேரம் தருவது தான் தருமம் .... அதிகாரிகள் ஆசையும் விருப்பமும் இதுதான் போல..
ReplyDeleteநேர்மையாக செய்முறை தேர்வை நடத்துங்கள் இல்லையேல் செய்முறை தேர்வை ரத்து செய்து விடுங்கள்..
ReplyDeleteஒரு பயனும் இல்லாத காப்பி அடித்து எழுதும் செய்முறை தேர்வை தூக்கி வீசுங்கள்..