வரும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் பாடத்திட்டம் குறைப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.இக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி துறை இயக்குநர், தொடக்கக் கல்வி துறை இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
* தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம்
* பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ் பங்கேற்பு
* பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி பங்கேற்பு
மகிழ்ச்சி
ReplyDeleteWhat about college
ReplyDeleteIs it true
ReplyDelete