அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 0% ஆகும் அகவிலைப்படி.. கணக்கீட்டில் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2024

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 0% ஆகும் அகவிலைப்படி.. கணக்கீட்டில் மாற்றம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வாகும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுவதால், அகவிலைப்படி 50% எட்டும். அதன்பின் மீண்டும் அகவிலைப்படி 0% ஆக மாற்றப்படும்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்தது. அந்த அகவிலைப்படி உயர்வானது அக்டோபர் மாதம் ஊதியத்தில் வழங்கப்படும் எனவும், இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும் எனக் கூறப்படும் நிலையில், அது 50% ஆக உயரும். மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். நிலுவைத் தொகையானது, அறிவிக்கப்பட்ட சதவீத உயர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். உதாரணமாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு 4 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும்.


அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது!


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7ஆவது ஊதியக்குழுவின் கீழ், லெவல் 1 முதல் லெவல் 18 வரை வெவ்வேறு தர ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அகவிலைப்படியானது தர ஊதியம் மற்றும் பயணப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் லெவல் 1 இல், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56900 ஆக உள்ளது. நிலை 2 முதல் 14 வரையிலான ஊழியர்களுக்கு சம்பளம் தர ஊதியத்தின் படி மாறுபடும். நிலை 15, 17, 18க்கு தர ஊதியம் இல்லை. மாறாக, அடிப்படை சம்பளம் முறையே, ரூ.1,82,200, ரூ.2,25,000, ரூ.2,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நிலை 1 இல் உள்ள ஊழியர்களின் தர ஊதியம் ரூ 1800 ஆகும். இதில் அடிப்படை ஊதியம் ரூ.18000. இது தவிர, பயணக் கொடுப்பனவும் (TA) சேர்க்கப்பட்டுள்ளது. லெவல்-1 கிரேடு பே-1800ல் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி